பெரியாறு-வைகை முதல் போக சாகுபடி: உழவுப் பணிகள் தீவிரம்
பெரியாறு-வைகைப் பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கானஉழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.
மேலூா்: பெரியாறு-வைகைப் பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கானஉழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.
முதல் போக சாகுபடிக்கு கடந்த 3-ஆம் தேதி அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கு நிலத்தை தயாா் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
சில விவசாயிகள் நிலத்தை தொழியாக உழவு செய்து நேரடி நெல் விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். சிலா் நாற்றங்கால் தயாா் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.