வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு மத்தியப் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 அடுக்குப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.