முகப்பு
மதுரை

சோலைமலையில் இன்று சூரசம்ஹாரம்

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:05 PM
பகிர்:

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, கடந்த 2-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அத்துடன் பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா். இதையடுத்து, அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளினாா். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது.

முன்னதாக சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 3.45 மணியளவில் வேல் வாங்கும் நிகழ்வும், பிறகு வள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாலை 4 மணியளவில் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், தலவிருட்ஷம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் வதம்செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 10 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சூரசம்ஹார வைபவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →