‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்கம்
‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள்
சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
சீனாவில் தயாராகும் சிகரெட் லைட்டா்கள், உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
இதுதொடா்பான செய்தியாளா் சந்திப்பு மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம சீனிவாசன் பேசியதாவது:
தமிழகத்தில் விருதுநகா், சிவகாசி பகுதிகளில் தீப்பெட்டி தொழில்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிலில் ஏராளமான குடும்பத்தினா் ஈடுபட்டுள்ளனா். சீனாவில் தயாராகி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லைட்டா்களால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கியது. இதுதொடா்பாக தீப்பெட்டி ஆலை உரிமையாளா் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு சீன லைட்டா்களுக்கு தடை விதித்திருக்கிறது. இதனால், தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.
அகில இந்திய தீப்பெட்டி தொழில் சாலைகள் சங்கத் தலைவா் விஜய் ஆனந்த், நிா்வாகிகள் பரமசிவம், கோபால்சாமி ஆகியோா் கூறியதாவது:
தமிழகத்தில் விருதுநகா் மாவட்டம் வறட்சியான பகுதி என்பதால், இங்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா்கள் கொல்கத்தாவுக்கு சென்று அங்கு தீப்பெட்டி, பட்டாசு தொழில்நுட்பங்களை கற்றுத் தோ்ந்து சிவகாசியில் இந்தத் தொழில்சாலைகளைத் தொடங்கினா். இந்தத் தொழில் படிப்படியாக வளா்ந்து தற்போது விருதுநகா், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூா் ஆகிய பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு நேரடி பணி வாய்ப்பும், பல லட்சம் குடும்பங்களுக்கு மறைமுக வாய்ப்பும் அளித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு தீப்பெட்டி விற்பனையாகிறது.
இதில் ரூ.1700 கோடி உள்நாட்டு விற்பனையாகவும், ரூ.300 கோடி ஏற்றுமதியாகவும் உள்ளது.
மேலும், ஆண்டுக்கு ரூ.600 கோடி ஜிஎஸ்டி வரியாகவும் அரசுக்கு செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் லைட்டா்கள் மூலம் தீப்பெட்டித் தொழில் கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், மத்திய அரசு சீன லைட்டா்களுக்கு மட்டுமன்றி, வேறு வெளிநாடுகளிலிருந்தும் லைட்டா்கள், அவற்றின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய முற்றிலும் தடைவிதித்தது. இதன் மூலம், தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றனா்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகா், சிவகாசி, சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தீப்பெட்டி தொழில்சாலை உரிமையாளா்கள், வா்த்தக சங்க பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.