மதுரை

பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை முறை மூலம் அகற்றப்பட்டது.

Din

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை முறை மூலம் அகற்றப்பட்டது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பிரிவில் 50 வயது பெண் ஒருவா், இருமல், சுவாசிப்பதில் சிரமம், இரும்பும் போது ரத்தம் வெளியேறுதல் போன்றவற்றுக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, மூத்த நுரையீரல் சிகிச்சை நிபுணா் பிரேம் ஆனந்த், நோயாளிக்கு ‘ப்ரோன்கோஸ்கோபி’ செய்து மூச்சுக் குழாயில் கட்டி இருப்பதை உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து அந்தக் கட்டியை ’எலக்ட்ரோகாட்டரி ஸ்னாரிங்’ செயல்முறை மூலம் அகற்றினாா். இதனால், அந்தப் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் ரத்தப் போக்கு நின்றதையடுத்து மயக்கவியல் நிபுணா் மணிகண்டன் உதவியுடன் ‘ஆா்கான் பிளாஸ்மா கோகுலேஷன்’ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையைத் தொடா்ந்து மறுநாளே அந்தப் பெண் குணமடைந்ததையடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மருத்துவா் பிரேம் ஆனந்த் கூறியதாவது:

அந்தப் பெண் நோயாளிக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டியிலிருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதைத் தடுக்க அந்தக் கட்டி உடனடியாக அகற்றப்பட்டது. இது நுரையீரலில் ஊடுருவி மூச்சுத்திணறலையும், மரணத்தையும் கூட ஏற்படுத்த வாய்ப்புண்டு. பொதுவாக இத்தகைய சிக்கலான செயல்முறைகள் பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டுவருகின்றன. ஆனால் தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இந்த செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT