முகப்பு
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மதுரை

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நல சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நல சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:30 PM
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நல சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, இந்தச் சங்கத்தின் மாநில இணைச் செயலா் இரா. முருகதாசன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மணிவாசகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி திமுக அரசு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கிராம சுகாதார செவிவிலியா் சங்க மாநிலத் தலைவா் கே. சின்னப்பொண்ணு, வருவாய் கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். மாரியப்பன், வணிக வரித் துறை ஊழியா் சங்க இணைச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோா் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →