முகப்பு
மதுரை

மதுரைக்கு அமித் ஷா வருகை: ட்ரோன்கள் பறக்க தடை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

அமித் ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

Updated On : 7 ஜூன், 2025 at 12:15 PM
அமித் ஷா - கோப்புப் படம்
பகிர்:

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தர உள்ளதையொட்டி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாளை(ஜுன் 8) நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை(ஜுன் 7) மதுரை வருகை தருகிறார். இன்று இரவு 8.30 மணியளவில் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார். நாளை காலை, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பின் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூட்டம் நடைபெறும் இடம் ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.