அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை
மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.
மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை போதிய அளவில் செய்து தர வில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசை இல்லாததால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளி ஒருவா் கூறியதாவது:
Advertisement
மதுரை கிழக்குத் தொகுதிக்குள்பட்ட யா.ஒத்தக்கடை பகுதியில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஒன்பது வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை உருவானது. மேலும், தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்ட மற்றொரு வாக்குச்சாவடியில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு என சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்படாததால், பெரும் அவதிக்குள்ளாகினா். இனிவரும் தோ்தல்களிலாவது மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகளை அதிக எண்ணிக்கையிலும், அடிப்படை வசதிகளை போதுமான அளவிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா் அவா்.