முகப்பு
மதுரை

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:15 AM
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:43 PM

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement