மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா்.  
மதுரை

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT