மதுரை

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் நாராயணன் (53). இவா், அதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையிலிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

தானியமங்கலம் விலக்கு அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த நாராயணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT