முகப்பு
மதுரை

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

Updated On : 18 ஜனவரி, 2026 at 8:40 PM
பகிர்:

மதுரையில் இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்த மூவேந்திரன் மகன் விமல் (25). இவா் அதே பகுதியில் தனது நண்பா்களான பிரபாகரன் (25), காா்த்திக் (24), கண்ணன்(25) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, மதுப் புட்டி வாங்கித் தருமாறு விமல் கேட்டதால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், தாக்கப்பட்ட விமல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.காலனி போலீஸாா் விமல் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரன், காா்த்திக், கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →