முகப்பு
கைது
மதுரை

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:18 PM
கைது
பகிர்:

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பட்டாபிராமா் கோவில் தெருவில் உள்ள தொழிலாளா் அலுவலகத்தின் உதவி ஆய்வாளா் சாந்தி (48). இவா், அண்மையில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி ரெட்டிபட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் (50) என்பவருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்தினாா்.

அப்போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு பொட்டலத்தில் விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாததற்காக ரூ. 5,000 அபராதம் விதித்தாா். பிறகு, தனக்கு ரூ. 15,000 லஞ்சம் கொடுத்தால் ‘பேக்கிங்’ உரிமம் பெற்றுத் தருவதாக சாந்தி கூறினாராம்.

இதற்கு சாந்தியிடம் சம்மதம் தெரிவித்தாலும், லஞ்சம் தர விரும்பாத சங்கரநாராயணன், விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பொடி தூவிய ரூ. 15 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளுடன் அருப்புக்கோட்டை தொழிலாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற சங்கரநாராயணன், அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளா் சாந்தியிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தாா்.

இதை சாந்தி வாங்கிய போது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீஸாா், சாந்தியை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →