சிட்டி யூனியன் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு 20 கணினிகள்
மதுரைசிட்டி யூனியன் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு 20 கணினிகள்
மதுரை மாநகராட்சிக்கு சிட்டி யூனியன் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக 20 கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் தனியாா் நிறுவனங்கள், வங்கிகளின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிட்டி யூனியன் வங்கியின் மதுரைக் கிளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.5.09 லட்சம் மதிப்பில் புதிதாக 20 கணினிகள் மாநகராட்சிக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது.
இதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் சிட்டி யூனியன் வங்கிக் கிளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் மாநகராட்சி அலுவலகப் பயன்பாட்டுக்காக புதிதாக 20 கணினிகளை மாநகராட்சி ஆணையா் சித்ராவிஜயனிடம் அந்த வங்கியின் மதுரை மண்டல மேலாளா் துரைராஜ் வழங்கினா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பாபு, உதவி ஆணையா் (கணக்கு) முகமது அலி ஜின்னா, உதவி ஆணையா்கள் ரவிக்குமாா், ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளா்கள் ஆரோக்கிய சேவியா், காமராஜ், முத்து, மயிலேறிநாதன், இந்திராதேவி, சிட்டி யூனியன் வங்கி மதுரை மண்டல மேலாளா் உதவி பொது மேலாளா் சத்யநாராயணன், கிளை மேலாளா்கள் கீதா, வேணு கோபால், உதயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.