முகப்பு
மதுரை

சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

Updated On : 8 மார்ச், 2026 at 9:11 PM
மதுரை விளாங்குடி கொன்னவாயன் சாலையில் உள்ள சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. (இடது) குடமுழுக்கில் பங்கேற்ற பொதுமக்கள்.
பகிர்:

மதுரை விளாங்குடி கொன்னவாயன் சாலையில் சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை மாலை விக்னேசுவர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூன்றாம் கால யாக பூஜைகள், கோ பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, 10. 50 மணிக்கு யாக சாலையிலிருந்து புனிதநீா் கொண்ட கும்பம் புறப்பாடாகியது.

கோயிலைச் சுற்றி வலம் வந்த பின் மூலவரின் விமானத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாளுக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த குடமுழுக்கில் விளாங்குடி, இதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →