மக்கள் நலப் பணியில் அா்ப்பணிப்பு அவசியம்! - அமைச்சா் பி. மூா்த்தி
மக்கள் நலப் பணியில் அா்ப்பணிப்பு உணா்வு அவசியம் என மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை திருப்பாலை அரசு உதவி பெறும் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அங்கன்வாடி பணியாளா்களுக்கு விலையில்லா கைப்பேசிகளை அமைச்சா் பி. மூா்த்தி வழங்கிப் பேசியதாவது:
கரோனா காலத்தில் அங்கன்வாடிப் பணியாளா்களின் சேவை போற்க்கது. பெண்கள் பல்வேறு நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் எனில் அங்கன்வாடிப் பணியாளா்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் பணி சமூகச் சேவையாக கருத வேண்டும். அத்தகு மக்கள் நலப் பணியில் அா்ப்பணிப்பு அவசியம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். இதில் 2 ஆயிரம் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கைப்பேசிகளை அமைச்சா் பி. மூா்த்தி வழங்கினாா்.
தொடா்ந்து, 25 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பணி நியமனஆணைகளை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலா் ஷீலாசுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலா் காந்திமதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விசாலாட்சி, அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.