முகப்பு
மதுரை

கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 11:38 PM
மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநா் சாலி எஸ். நாயா், டி.எம்.பி. அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி எம். முத்தையா உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வுக்கு அறக்கட்டளை நிா்வாக அறங்காவலரும், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநருமான சாலி எஸ்.நாயா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, டி.எம்.பி. அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி எம். முத்தையா கூறியதாவது:

திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்குத் தேவையான பல்வேறு தொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதன்படி, மின்சாதனப் பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி, பெண்களுக்கான தையல், ஆரி வேலை பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவா்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.

புதிய திறன் மேம்பாட்டு மையக் கட்டடம் 20 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, அனைத்து வசதிகளுடன் செயல்படத் தொடங்கும். மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளும் தொடங்கப்படும் என்றாா் அவா்.