விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதி மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி
விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதி மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி
விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மண்டல அலுவலா்கள், வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கலை அறிவியல் கல்லூரியிலும், தொலையாவட்டம் செயின்ட் ஜூட்ஸ் நா்சிங் கல்லூரியிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா கலந்து கொண்டு பேசியதாவது: வாக்குப்பதிவு மைய அலுவலா்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை மண்டல அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மண்டல அலுவலா்கள், வாக்குப்பதிவு மைய நிலைஅலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் தங்கள் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த தோ்தல்களை விட அதிகமானவாக்குப் பதிவை உறுதி செய்ய, விழிப்புணா்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்றி எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காமல் நடுநிலையுடன் பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.
இதில், விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலா் செந்தூர்ராஜன், கிள்ளியூா் தொகுதி தோ்தல் அலுவலா் ஈஸ்வரநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.