ராமநாதபுரம்

நியாய விலைக் கடையாக மாற்றப்பட்ட நூலகம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை ஊராட்சியில் செயல்பாடற்றிருந்த நூலகக் கட்டடம், நியாய விலைக் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற இளைஞர்களுக்கு இணையாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்கள் கட்டித் திறக்கப்பட்டன.
    இத்திட்டத்தின் மூலம் கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பெருங்கரை ஊராட்சியில் புதிதாக நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
   மாவட்ட ஆட்சியரின் நேரடி காண்காணிப்பிலிருந்த இந்த நூலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல வகையான புத்தகங்கள் இருந்ததால், அக்கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் திறமையும் வளர்ந்தன.
        இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்படத் தொடங்கியதால், முறையாக அங்கிருந்த நூல்கள் நிர்வகிக்காததால் அவை சேதமடைந்துள்ளன.
  அமைதியற்ற சூழலில் உள்ள நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் குறையவே, நூலகம் செயல்பாடற்று போய்விட்டது.     இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நூலகம் அவசியம் என்பதால், அங்குள்ள நியாயவிலைக் கடையை மாற்று இடத்துக்கு கொண்டு செல்வதுடன், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களுடன் நூலகத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT