ராமநாதபுரம்

ஊராட்சிமன்ற எழுத்தரை தாக்கியவர் கைது

DIN

பரமக்குடி அருகே புதன்கிழமை தெருவிளக்கு பொறுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற எழுத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி ஒன்றியம் விளான்குடி ஊராட்சிமன்ற எழுத்தராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து மகன் ராஜா(35). இவருக்கும் புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் மகன் லெனின்குமார் (28) என்பவருக்கும் தெருவிளக்கு பொருத்துவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில்,ராஜா புலிக்குளம் தண்ணீர் தொட்டி  பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து லெனின்குமார் தாக்கினாராம். இதுகுறித்து, பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில் காவல் சார்பு} ஆய்வாளர் முருகானந்தம் வழக்குப் பதிந்து லெனின்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT