பரமக்குடி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய தலைவராக கே.வி.ஆர்.கந்தசாமி, செயலாளர் எம்.கருணாநிதி, பொருளாளர் காமராசு, துணைத் தலைவர் ஆர்.திருமுருகன், துணைச்செயலாளர் பா.கோபாலபாண்டி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்வை வழக்குரைஞர்கள் பி.வி.சண்முகம், இ.ரவி, பி.திருச்செல்வம் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்தினர்.