முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
   தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் விலக்குச் சாலையில் புதன்கிழமை அதிகாலையில், பேருந்து சென்றபோது, சாலையில் மாடு குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.  ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தகவலறிந்த தொண்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த பயணிகளை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →