ராமநாதபுரம்

வாலாந்தரவை ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது.
   இந்தியன் ரெட்கிராஸ் ராமநாதபுரம் மாவட்டக் கிளையும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமும் இணைந்து புதன்கிழமை இப்பணியை மேற்கொண்டன.
  இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் ராமநாதபுரம் கிளைத் தலைவர் எஸ்.ஹாரூன் தலைமை வகித்தார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிர்வாகப் பொறியாளர் கே.இளங்கோவன்,இந்தியன்  ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், வாலாந்தரவை ரயில் நிலைய பொறுப்பாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் டி.எஸ்.பி. எம். நடராஜன் தூய்மை தூய்மைப் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் அஸ்மாக் அன்வர்தீன்,பொருளாளர் குணசேகரன் ,செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்,இளைஞர் ரெட்கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT