முகப்பு
ராமநாதபுரம்

திரௌபதி அம்மன் கோயிலில்  ஆடித்திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. அதையடுத்து, காப்புக்கட்டுதல், கொடியேற்றும் வைபவமும் நடைபெற்றன. விழாவையொட்டி, தினமும் இரவு கோயில் வளாகம் முன், மகாபாரதம் தொடர் திரையிடப்படவுள்ளது.
 வரும் 14 ஆம் தேதி பஞ்சபாண்டவர் திரௌபதி திருக்கல்யாணமும், 16 ஆம் தேதி அர்ச்சுணன் தபசு நிகழ்ச்சியும், 18, 19 ஆம் தேதிகளில் பீமன் கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகிறது.
  22ஆம் தேதி மகாபாரத கதையுடன் தொடர்புடைய அரவான் களப்பலியும், 23ஆம் தேதி துரியோதனன் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. 26 ஆம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. 
அன்று இரவு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.