ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

DIN

ராமநாதபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம  இரு நபர்கள் அவர் அணிந்திருந்த 12 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டதாக கேணிக்கரை போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் பகுதி மாயவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாலாமணி (55). இவர் தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலான தர்மமூனீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். 
ஆட்டோவிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவர் அணிந்திருந்த  தாலிச்சங்கிலியை பறித்து விட்டு தப்பினர்.
சம்பவம் தொடர்பாக பாலாமணி கேணிக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT