ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

DIN

ஆர்.எஸ்.மங்கலம் அருகே வியாழக்கிழமை வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் வியாழக்கிழமை திருடப்பட்டுள்ளன.
      ஆர்.எஸ். மங்கலம் அருகே எட்டியதடலைச் சேர்ந்தவர் வேதசூசைமாணிக்கம் (81).விவசாயியான இவர், வியாழக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டாராம். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய இவர், பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.   இது குறித்து வேதசூசைமாணிக்கம் அளித்த புகாரின்பேரில், ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT