ஆர்.எஸ்.மங்கலம் அருகே வியாழக்கிழமை வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் வியாழக்கிழமை திருடப்பட்டுள்ளன.
ஆர்.எஸ். மங்கலம் அருகே எட்டியதடலைச் சேர்ந்தவர் வேதசூசைமாணிக்கம் (81).விவசாயியான இவர், வியாழக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டாராம். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய இவர், பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வேதசூசைமாணிக்கம் அளித்த புகாரின்பேரில், ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.