ராமநாதபுரம்

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு: முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் பாராட்டு

DIN

தூய்மை இந்தியா திட்டம் குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு  மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை  ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. 
இதில், முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 48 ஊராட்சிகளில்  உள்ள அனைத்து கிராமங்களிலும் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சாவித்ரியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். 
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கென்சிலீமா அமாலினி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT