ராமநாதபுரம்

முத்தாலம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பாவாடை அன்பளிப்பு

DIN

ராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்டபாவாடையை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தாலம்மன் மகளிர் மன்றத்தின் தலைவி உஷா சுப்பிரமணியன், செயலாளர் கீதா ரகுநாத் மற்றும் உறுப்பினர்கள் முத்தாலம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட தங்கப்பாவாடை, தங்க கிரீடம், தங்கச் சட்டை  ஆகியனவற்றை  அன்பளிப்பாக வழங்கினர். 
இதனை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன், பொருளாளர் பி.ஜானகிராமன், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நவராத்திரியை  முன்னிட்டு  ஆலய வளாகத்தில்  பரமக்குடி ஜனனி மன்ற குழுவினரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT