முகப்பு
ராமநாதபுரம்

தேவர் குருபூஜை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:52 AM
பகிர்:

கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.
     ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
     பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. திறந்து வைத்தார். இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம், திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.