ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு

DIN

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலி பெருக்கி நிறுவன உரிமையாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமர் (45). இவர் விழாக்களுக்கு ஒலி பெருக்கி அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதே ஊரில் ஒரு திருமண விழாவிற்காக, செவ்வாய்க்கிழமை இரவு மரத்தில் ஒலி பெருக்கி அமைக்கும் போது எதிர்பாராதவிதமாக ராமர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடலை கைப்பற்றிய போலீஸார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT