ராமநாதபுரம்

தொண்டியில் விபத்து: இளைஞர் பலி

DIN


தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் செவ்வாய்கிழமை இரவு நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 
 திருவாடானை அருகேயுள்ள தொண்டியைச் சேர்ந்த சேக்முகமது (35), இவரது சகோதரர் செய்யது அபுதாஹிர் (30) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சேக் முகம்மது பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தொண்டி போலீஸார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT