ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

DIN

ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் கே.சுப்பையா  செவ்வாய்க்கிழமை திடீரென மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கோவை மாநகராட்சி பயிற்சி மைய அதிகாரி விஸ்வநாதன் ராமநாதபுரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் கே.சுப்பையா. இவர் உசிலம்பட்டி நகராட்சி ஆணையராக இருந்து கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஆணையராக பொறுப்பேற்ற போது முதல் நிலை அந்தஸ்தில் ராமநாதபுரம் நகராட்சி இருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சியானது சிறப்பு நிலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டது.  இதனால் அதற்கான தகுதி நிலை அதிகாரி ஒருவரே ராமநாதபுரம் நகராட்சிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. 
இந்நிலையில்,  ராமநாதபுரம் நகராட்சி ஆணையராக இருந்த கே.சுப்பையா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக கோவை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என நகராட்சி நிர்வாக உயரதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சுப்பையா மீது சர்ச்சைகள் எழுந்தன. அதனடிப்படையில் அவர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT