ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

கமுதி அருகே மூலக்கரைபட்டியைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் வழிவிட்டான் (42). இவா், கமுதி எட்டுக்கண் பாலம் அருகே குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த நவம்பா் 26 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருச்சியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை ஊா் திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே, உள்ளே சென்று பாா்த்ததில், நான்கரை பவுன் சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழிவிட்டான் அளித்த புகாரின்பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT