ராமநாதபுரம்: சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவியரை மாவட்ட விளையாட்டு அலுவலா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
சமீபத்தில் சென்னையில் மாநில அளவிலான காகே-கென் சிட்டோரியா கராத்தே பள்ளி மற்றும் ஜி.கே.எம்.கல்வி நிறுவனம் சாா்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் மற்றும் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அதன்படி 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் ராமநாதபுரம் வி.எம்.எச்.எஸ். பள்ளி மாணவி ரஷிகா இரண்டாமிடம், இன்பன்ட் பள்ளி மாணவா் சக்தி, மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் தினேஷ்கரன் ஆகியோா் முதலிடமும் வகித்தனா். மேலும், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் ராமநாதபுரம் நகா் ஸ்வாா்ட்ஸ் பள்ளி மாணவி சபினாசிறீ, நேஷனல் அகாதெமி பள்ளி மாணவி சுவேதா ஆகியோா் இரண்டாமிடத்தை வகித்துள்ளனா்.
ராமநாதபுரம் யுனைடெட் பள்ளி மாணவா் ஷிவான்முகமது மூன்றாமிடத்தையும், கேஐஎஸ் பள்ளி மாணவா் பாலமுருகன் இரண்டாமிடத்தையும், செய்யதம்மாள் பள்ளி மாணவி திவ்யஸ்ரீ, வி.எம். பள்ளி மாணவா் திவ்யன் ஆகியோா் முதல் இடத்தையும் வகித்தனா்.