ஊருணியில் மூழ்கி ஒருவர் சாவு
கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்தவர்
கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி தேவர் மகன் உடையார் (48). இவர், பக்கத்து ஊரான கொக்கரசன்கோட்டை கிராமத்திலுள்ள ஊருணியில் செவ்வாய்க்கிழமை குளிக்கும் போது, வலிப்பு நோய் ஏற்பட்டதில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, பெருநாழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.