ராமநாதபுரம்

தொண்டி அருகே வெடிபொருள்களுடன் ஒருவர் கைது

திருவாடானை அருகே தொண்டியில் வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை ஞாயிற்றுக்கிழமை

DIN

திருவாடானை அருகே தொண்டியில் வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து வெடிபொருள்களையும் பறிமுதல் செய்தனர். 
திருவாடானை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் தொண்டி - புதுக்குடி பகுதியில், ஆழ்கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட வெடி பொருள்களை ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக, தொண்டி கடலோர போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற கடலோரக் காவல் துறை சார்பு-ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் போலீஸார் ஆய்வு நடத்தினர். 
அதில், புதுக்குடியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபத்திரன் (44) என்பவர், ஆழ்கடலில் வெடிவைத்து மீன்பிடிப்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் 65,  டெட்டனேட்டர்கள் 44,  வயர் 5 மீட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT