ராமநாதபுரம்

சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பு; ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை: 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்திவைப்பு

DIN


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்றுடன், ஆழ்கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், ராமேசுவரம் சுற்றுவட்டாரப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தடை விதித்தனர். இதனால் துறைமுகங்களில் 1,500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள துறைமுகங்களில் 1,500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT