ராமநாதபுரம்

ஆடி அமாவாசை: ராமேசுவரம்  ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு

ராமேசுவரத்திற்கு வரும் ரயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

DIN

ராமேசுவரத்திற்கு வரும் ரயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே துறை காவலர்கள் கூறியதாவது: ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் வந்து செல்வதற்காக தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை  இயக்க உள்ளது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வரும் ரயில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 மதுரை-ராமேசுவரம்  இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் சமூகவிரோத செயல்கள், குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாதாரண உடையில் ஏராளமான குற்றப்பிரிவு போலீஸார் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT