ராமநாதபுரம்

இடப் பிரச்னையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே வழிமுத்தூர் கிராமத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி சொர்ணாம்பிகா (55). இவர் சனிக்கிழமை மாலையில் தனது நிலத்தை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சிலர் வழிமறித்து அவரைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொர்ணாம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில், வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இவரது மனைவி நித்யா மற்றும் உறவினர்களான குமார், ராதிகா, ராஜூ, வசந்தா ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT