ராமநாதபுரம்

தொண்டி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு

DIN

திருவாடானை அருகே  பாண்டுகுடியில் படுக்கையில் தீப்பிடித்து காயமடைந்த இளைஞர்  சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 
       பாண்டுகுடியைச் சேர்ந்தவர் குமார் (35). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர், மது போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்ததால், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
     இந்நிலையில், குமார் கடந்த சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டில் படுத்திருந்தபோது, பீடியை குடித்துவிட்டு அணைக்காமல் தூங்கிவிட்டாராம். இதனால், படுக்கையில் தீப்பிடித்து பரவி குமாரின் உடலில் பற்றியது. அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருவாடனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி குமார் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 
     இது குறித்து இவரது சகோதரி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT