ராமநாதபுரம்

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஸ்ரீவராகமஹாதேசிகன் சுவாமிகள் தரிசனம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஸ்ரீவராகமஹாதேசிகன் சுவாமிகள் புதன்கிழமை தரிசனம் செய்தார்.
 வைணவத் திருமடங்களில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரமம் முக்கியமானதாகும். இதன் 12 ஆவது பீடாதிபதியான ஸ்ரீவராகமஹாதேசிகன் சுவாமிகள் முதன்முறையாக திருப்புல்லாணிக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தார். அவருக்கு ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் தக்கார் கண்ணன் தலைமையில் பூரணகும்பம் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து திருப்புல்லாணியில் உள்ள மடத்தின் கிளையில் தங்கிய ஸ்ரீவராகமஹாதேசிகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். பின்னர் புதன்கிழமை காலையில் சேதுக்கரையில் புனித நீராடிய அவர் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். 
 வரும் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை திருப்புல்லாணியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீவராமஹாதேசிகன் சுவாமிகள் அட்சயை திருதியை பூஜை மேற்கொள்ளவுள்ளார். அவரை தரிசிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருப்புல்லாணி வந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT