ராமநாதபுரம்

எமனேசுவரத்தில் தேரோட்ட உற்சவம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவில் தேரோட்டம் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
  செளராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில் கடந்த  7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.  பகல், இரவு வேளைகளில் பெருமாள் பல்வேறு அவதாரங்களிலும், வாகனங்களிலும் எழுந்தருளி ரதவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள்கிழமை ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்ட உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்குமேல் பெருமாள் சர்வ அலங்காரத்தில் அலங்காரமாகி தேரில் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மேள,தாளங்கள் முழங்க பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்த கோஷங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை எமனேசுவரம் செளராஷ்ட்ர சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT