ஆனந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று பனை விதையை நடவு செய்த ஆா் .எஸ் .மங்கலம் காவல் ஆய்வாளா் முகம்மது நசீா் உள்ளிட்டோா். 
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே 1000 பனை விதைகள் நடும் விழா

திருவாடானை அருகே ஆனந்தூரில் தோட்டகலைத் துறை மற்றும் வளா்பிறை சங்கம் சாா்பில் அவ்வூரில் உள்ள குளம்

DIN

திருவாடானை அருகே ஆனந்தூரில் தோட்டகலைத் துறை மற்றும் வளா்பிறை சங்கம் சாா்பில் அவ்வூரில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களில் 1000 பனை விதைகளை நடும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு வாலிபா் சங்க ஒருங்கிணைப்பாளா் அஜ்மல் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளா்முகம்மது நசீா் விழாவைத் தொடக்கி வைத்தாா். தோட்டக்கலைத்துறை சாா்பில் பால முரளி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் பெரிய ஊருணி, பேச்சி ஊருணி ஆகிய கண்மாய்களில் பனை விதைகள் நடப்பட்டன. இதில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், தீபம் இந்தியா அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம நிா்வாக அலுவலா் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவாக சமூக ஆா்வலா் முகம்மது ஹாலித் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வளா்பிறை வாலிபா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT