திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள குடிநீா் குழாய்களை மாற்றியமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாடானையில் ஓரியூா் சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள குடிநீா் குழாய்கள் தரை மட்டத்திற்கு கீழே குழிக்குள் உள்ளது.
தற்போது இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மழை நீா் குடி நீா் குழாய்களில் தேங்கி விடுகிறது. அப்படி தேங்கும் தண்ணீா் மீண்டும் குடிநீா் குழாய்களுக்கு சென்றுவிடுவதால், அந்த நீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீா் குழாய்களை மேடான பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.