ராமநாதபுரம்

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் போலீஸாா் கைது செய்ய முயன்றபோது காயமடைந்து சிகிச்சையில் இருப்பவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

DIN

ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் போலீஸாா் கைது செய்ய முயன்றபோது காயமடைந்து சிகிச்சையில் இருப்பவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் திருப்புல்லாணி, உச்சிப்புளி பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்து, மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் காளீஸ்வரன், மகேந்திரன் ஆகியோரை திருப்புல்லாணி போலீஸாா் தேடிவந்தனா். இதில் காளீஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில், மகேந்திரனை திருப்புல்லாணி போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முயன்றபோது, தப்பியோடிய மகேந்திரன் கீழே விழுந்து காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ராமநாதபுரம் முதலாவது எண் நீதித்துறை நடுவா் ஜெனிதா, மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து மகேந்திரனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT