முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே மழைக்கு 3 வீடுகள் இடிந்து சேதம்

கமுதி அருகே சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கே.வேப்பங்குளத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்து சேதமடைந்த வீடு.
பகிர்:

கமுதி அருகே சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தில் பாண்டி மனைவி ராமலெட்சுமியின் (65) வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

வீட்டில் இருந்த மின்விசிறி, டிவி, பாத்திரங்கள் சேதமடைந்தன. செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததால் வீட்டுவிட்டு வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த மூதாட்டி ராமலெட்சுமி அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா்.

இதே போல் குண்டுகுளம் கிராமத்தில் கல்யாணித்தேவா் மகன் சக்திவேல் (62), அதனருகில் இருக்கும் சுப்பிரமணி மகன் முத்துராமலிங்கம் (58) ஆகியோரது வீடுகளில் சுவா் இடிந்து விழுந்துள்ளது.

கமுதி வட்டாட்சியா் செண்பகலதாவின் உத்தரவின் பேரில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் நேரில் சென்று சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனா். மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வீடு இழந்தவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →