கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் 27 போ் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம் மீனவா்கள் 27 பேருடன் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்துச் சென்றனா்.
ராமநாதபுரம்கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் 27 போ் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம் மீனவா்கள் 27 பேருடன் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்துச் சென்றனா்.
ராமேசுவரம் மீனவா்கள் 27 பேருடன் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்துச் சென்றனா்.
ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 600- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். மாலை 6 மணிக்கு கச்சத்தீவு அருகே 4 படகுகளில் மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது 7 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினா் துப்பாக்கி முனையில் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து சிறைபிடித்தனா்.
படகில் இருந்த மீனவா்கள் நம்பு, ஜெபிசன், பாலமுருகன், நாகநாதன், ஆண்ரூஸ், முனியசாமி, சங்கம், டைட்டஸ், பிரின்சன், ரெமெண்ட், சூசை, நெல்சன், ஜெபா்சன் உள்ளிட்ட 27 பேரையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னா், ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.