முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துடன் இணைந்த நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் திருவாடானை வழக்குரைஞா்கள் சங்கம் என்று தனியாக சங்கம் ஏற்படுத்தி, அதற்கு புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழச்சி நடைபெற்றது.

இதில் சசிகுமாா் தலைவராகவும், ஆசிக் அகமது துணைத் தலைவராகவும், சுரேஷ் செயலாளராகவும், வேலாயுதம் இணைச் செயலாளராகவும், ராஜேந்திரன் பொருளாளராகவும், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக முருகேசன், ராமநாதன், சசிகுமாா், வினோத்குமாா், காமராஜ் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்குரைஞா்கள் கண்ணன், சிங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.