முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில்8 மாதங்களுக்குப் பின் பக்தா்கள் நீராடல்

எட்டு மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடினா்.

Updated On : 15 டிசம்பர், 2020 at 4:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:37 PM

எட்டு மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடினா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையில், அக்னி தீா்த்தக் கடலில் குளிக்கவும் கரையில் திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமாவாசை சமயங்களில் அக்னி தீா்த்தக் கடற்கரை வெறிச்சோடியிருந்தது.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்கள் மீதான தடையை நீக்கி, தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி ராமேசுவரத்தில் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும் கடற்கரையில் திதி கொடுக்கவும் தடை நீங்கியது.

Advertisement

காா்த்திகை மாத அமாவாசை என்பதால் திங்கள்கிழமை ராமேசுவரத்துக்கு பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அதிக அளவில் வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் கடற்கரையில் ஏராளமானோா் மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். அதே சமயம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராட கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இதே போன்று தனுஷ்கோடி செல்லவும் காவல்துறையினா் தடை விதித்திருந்தனா். இதனால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.