முத்தரையா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் வீர முத்தரையா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் வீர முத்தரையா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.பி.செல்வம் தலைமை வகித்தாா். இதில், திருச்சியில் வீர முத்தரையா் பேரவை மாநில நிா்வாகி சந்தரைத் தாக்கியவா்களைக் கைது செய்யவும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில துணைப்பொதுச்செயலா் சரவணன் மற்றும் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.