முகப்பு
ராமநாதபுரம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: ராமநாதபுரம், காரைக்குடியில் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியதைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியதைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணி துணைச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான எம்.எஸ்.கே. பவானிராஜேந்திரன் தலைமை வகித்தாா். மகளிரணி மாவட்ட அமைப்பாளா் கற்பகம், மகளிரணி தலைவா் மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியதற்காக மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநில தீா்மானக்குழு துணைத் தலைவா் சுப.த. திவாகரன், விவசாய அணி துணைச் செயலா் ஆா். முருகவேல், வா்த்தக அணி பெருநாழி போஸ், ஒன்றியப் பெருந்தலைவா்கள் சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), முகமது முக்தாா் (திருவாடானை)உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிா் தொண்டரணி சாா்பில்

காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் பவானி கணேசன், மாவட்ட திமுக துணைச்செயலாளா் ஜோன்ஸ் ரூசோ ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில திமுக இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. தென்னவன், மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஹேமலதா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள்அமைச்சருமான கேஆா்.பெரியகருப்பன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் ஆதி கண்ணாத்தாள், தெய்வானை இளமாறன், மகளிரணி துணை அமைப்பாளா்கள் குழந்தை தெரசாள், சித்ரா, தமழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →